Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டி போட காத்திருக்கும் நிவர் புயல்; அவசர எண்கள் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:43 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற உள்ள நிலையில் நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிவர் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அவசர உதவிகளுக்கு மாநில அளவிலான உதவி எண் 1070, மாவட்ட அளவிலான உதவி எண் 1077 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நிவர் புயலால் சென்னையில் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 044-2538 4530, 044-2538 4540 ஆகிய அவசர எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் புயல் கரையை கடந்து விட்டதாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments