3 மாதங்கள் கழித்து ஆன்லைன் வந்த நித்தி! – பக்தர்கள் ஹேப்பி!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (12:06 IST)
கடந்த 3 மாத காலமாக சமாதி நிலையில் இருந்து வந்த சாமியார் நித்தியானந்தா நேற்று மீண்டும் பக்தர்களுக்கு ஆன்லைனில் தோன்றியுள்ளார்.

பிரபல சாமியாரான நித்தியானந்தா பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நிலையில் தலைமறைவாக இருந்தபடி அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாக பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த சில மாத காலமாக நித்தியானந்தாவின் வீடியோ எதும் வராத நிலையில் அவர் இறந்துவிட்டதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் நித்தியானந்தா சமாதி நிலையில் இருப்பதாகவும், ஜூலை 13 குருபூர்ணிமா அன்று சத்சங்கம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா இனி தொடர்ந்து சத்சங்கங்கள் நடைபெறும் என்றும், தான் இந்த மூன்று மாத காலத்தில் பெரும் தீர்க்கத்தை அடைந்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments