Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட அதிகமாக நிதி கொடுத்திருக்கிறோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (08:09 IST)
தமிழ்நாட்டில் இருந்து கிடைத்த வரியை விட அதிகமாக தமிழகத்திற்கு நிதி கொடுத்துள்ளோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தான் அதிக வரி கொடுக்கப்படுகிறது என்றும் ஆனால் தமிழகத்திற்கு குறைவான நிதிதான் வழங்கப்படுகிறது என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விளக்கத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசால் 2014 ஆம் ஆண்ட்டு முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ.2,88,627 கோடி. இதில் மானியமாக ரூ.2,58,338 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சிறப்பு உதவியாக வட்டியில்லா கடன் ரூ.6,412 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-2023 மார்ச் வரை தமிழ்நாட்டிடமிருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6.96 லட்சம் கோடியைக் கொடுத்திருக்கிறது. எனவே தமிழ் நாட்டிடமிருந்து வாங்கிய வரியை விடவும் அதிகமாக கொடுத்திருக்கிறோம் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments