Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சி தலைவர் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (14:16 IST)
நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
உள்ளூர் விசேஷங்கள் நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிப்பதை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்பதை தெரிந்ததே. 
 
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் அறிவித்துள்ளார். ஊட்டியில் நாளை 125 ஆவது மலர் கண்காட்சி நடைபெற இருப்பதை அடுத்து இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளைய மலர் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பார்க்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் மூன்றாம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சி தலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments