Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருமாறும் கொரோனாவை கண்டறிய சென்னையில் புதிய ஆய்வகம்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:20 IST)
உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய சென்னையில் புதிய ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,32,89,579 ஆக உயர்ந்துள்ளது. உருமாற்றம் அடையும் கொரோனாவால் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய சென்னையில் புதிய ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆய்வகம். 
 
இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாற்றத்தை கண்டறிய 11வது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments