நெல்லையில் வீடுகளை உடைத்து தொடர் கொள்ளை - அதிரடி கைது!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (11:38 IST)
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ரஹ்மத் நகர் மற்றும் மார்க்கெட் பகுதியில் அடுக்கு மாடி வீடுகளில், கடந்த 27-01-2002 ம் தேதி மற்றும் 03-03-2022 ஆகிய தேதிகளில் பகல் நேரத்தில், வீட்டை உடைத்து நடந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
 
இது தொடர்பாக, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.A.T.துரைக்குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர்  திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் திரு.பாலமுருகன் அவர்கள், மற்றும் திரு.அண்ணாதுரை அவர்கள் ஆகியோர்களின் உத்தரவின்படி, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பிராங்கிளின் அவர்கள் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை போலிசார் சைபர் கிரைம் மற்றும் CCTV கேமரா உதவியுடன் தீவிரமாக தேடிவந்தனர். 
 
இந்த நிலையில், மேற்படி குற்றச்செயலை செய்த பழங்குற்றவாளி தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (38) மேற்படி குற்றவாளியை கைது செய்து வழக்கின் சொத்துக்களான நகையை மீட்டும் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை (HONDA GRAZIA) கைப்பற்றியும் 12-03-2022ம் தேதியன்று  சிறையில் அடைத்தர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments