Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு பூக்கடையில் வாலிபர் வெட்டிக் கொலை

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (11:59 IST)
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு பூக்கடையில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
ஒட்டன்சத்திரம் சிக்கந்தர்நகரை சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன்கள் கார்த்திக், ஜெயக்குமார் (வயது 19). இதில் கார்த்திக், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு பூக்கடை வைத்துள்ளார். இந்த பூக்கடைக்கு அவரது தம்பி ஜெயக்குமார் தினமும் வந்து அண்ணணுக்கு உதவி செய்வார். 
 
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வழக்கம் போல் ஜெயக்குமார், பூக்கடைக்கு வந்தார். அப்போது  பூக்கடைக்கு  மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அரிவாள்களுடன் இறங்கினர்.
 
3 பேரும், ஜெயக்குமாரை சூழ்ந்து சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டனர். இதனை பார்த்து பயந்து போன பொதுமக்கள் யாரும் ஜெயக்குமுரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதை தொடந்து மோட்டார்சைக்கிளில் 3 பேரும் தப்பிவிட்டனர்.
 
இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். . இதுபற்றி தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
 
இதையடுத்து ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயக்குமாரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments