Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: நா.த.க முன்னாள் நிர்வாகி கைது!

Siva
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (08:50 IST)
12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவி என்சிசி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் என்சிசி பயிற்சியாளர் அந்த பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

என்சிசி பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என்றும் இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நள்ளிரவில் அவரை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் ஏற்கனவே தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது என்சிசி பயிற்சியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்