12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: நா.த.க முன்னாள் நிர்வாகி கைது!

Siva
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (08:50 IST)
12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவி என்சிசி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் என்சிசி பயிற்சியாளர் அந்த பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

என்சிசி பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என்றும் இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நள்ளிரவில் அவரை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் ஏற்கனவே தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது என்சிசி பயிற்சியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்: ஈபிஎஸ் வாக்குறுதி..!

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்