Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை – நாஞ்சில் சம்பத் கருத்து !

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (16:22 IST)
தமிழர்களுக்கு திமுகவை விட்டால் இப்போது வேறு நாதியில்லை என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிய பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார், இதையடுத்து அவர் தாய்க்கழகமான அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் எதிர்ப்பின் காரணமாக அங்கு கதவுகள் மூடப்படவே இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன் திமுகவில் இணைந்தார். 

தங்க தமிழ்ச்செல்வனின் இந்த இணைப்பு குறித்து அமமுகவில் இருந்து ஏற்கனவே விலகி திமுக பேச்சாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத்திடம் கேட்ட போது கூறியபோது, 'கொள்கையற்ற அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகியது நல்லது என்றும், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கும் பலம் சேர்ப்பார் என்றும், அரசியலில் அம்மணமாக நிற்கிறார். அதிமுக, அமமுக வில் இருந்துவிட்டு திமுக வுக்கு வந்ததில் எந்த தவறும் இல்லை. கள அரசியலில் இருந்தவர்களால் ஓய்வுப் பெற முடியாது. அதிமுக பாஜகவின் பி டீம். வரும் காலத்தில் அந்தக் கட்சியே இருக்காது. தமிழர்களுக்கு இப்போது திமுக வை விட்டால் வேறு நாதியே இல்லை. கூடங்குளம். ஸ்டெர்லைட், மும்மொழிக் கொள்கை என எல்லாப் பிரச்சனைகளையும் திமுகதான் கையில் எடுத்துப் போராடுகிறது. ஆகவே தமிழர்கள் திமுகவைக் கொண்டாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments