Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கை கொடுப்பது போல வந்து கொள்ளை! – நாமக்கலில் சிக்கிய நூதன கும்பல்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (14:05 IST)
நாமக்கலில் பத்திரிக்கை கொடுப்பது போல வந்து வீட்டில் கொள்ளையடிக்கும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. கோழி வியாபாரியான இவர் சமீபத்தில் மனைவியுடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டை உடைத்து நுழைந்த கும்பல் பீரோவில் இருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது..

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரி மோகனூர் அருகே 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அந்த கொள்ளையர்களில் மூன்று பேர் பெண்கள் தனியாக உள்ள வீடுகளை தொடர்ந்து கண்காணிப்பார்களாம். மருந்து விற்பனை பிரதிநிதி, ஆன்லைன் டெலிவரி பாய் போல அடிக்கடி அந்த வீடுகளை கண்காணிக்கும் அவர்கள் ஆள் இல்லா சமயம் பத்திரிகை கொடுக்க வரும் உறவினர் போல சென்று உள்ளே நுழைந்தவுடன் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடிப்பார்களாம்.

பல இடங்களில் இதுபோன்று கைவரிசை காட்டிய இந்த கூட்டம் தற்போது போலீஸில் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments