Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கை கொடுப்பது போல வந்து கொள்ளை! – நாமக்கலில் சிக்கிய நூதன கும்பல்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (14:05 IST)
நாமக்கலில் பத்திரிக்கை கொடுப்பது போல வந்து வீட்டில் கொள்ளையடிக்கும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. கோழி வியாபாரியான இவர் சமீபத்தில் மனைவியுடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டை உடைத்து நுழைந்த கும்பல் பீரோவில் இருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது..

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரி மோகனூர் அருகே 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அந்த கொள்ளையர்களில் மூன்று பேர் பெண்கள் தனியாக உள்ள வீடுகளை தொடர்ந்து கண்காணிப்பார்களாம். மருந்து விற்பனை பிரதிநிதி, ஆன்லைன் டெலிவரி பாய் போல அடிக்கடி அந்த வீடுகளை கண்காணிக்கும் அவர்கள் ஆள் இல்லா சமயம் பத்திரிகை கொடுக்க வரும் உறவினர் போல சென்று உள்ளே நுழைந்தவுடன் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடிப்பார்களாம்.

பல இடங்களில் இதுபோன்று கைவரிசை காட்டிய இந்த கூட்டம் தற்போது போலீஸில் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments