Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொத்தமாக ஆட்சியை கலைக்கும் நாராயணசாமி! – புதுச்சேரியில் பரபரப்பு!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:30 IST)
புதுச்சேரியில் ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கு மோதல் தொடர்ந்து வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். 30 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கந்தசாமி “மத்திய அரசும், ஆளுனர் கிரண்பேடியும் புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வருகின்றனர். அவர்கள் வற்புறுத்தலால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்து ஆட்சியை கலைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.ராஜினாமா...!