நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு எனது வணக்கமும் அஞ்சலியும்!- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (01:03 IST)
முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில்  சிக்கி  அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர்  உயிரிழந்த நிலையில்  நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு எனது வணக்கமும் அஞ்சலியும்  என முதல்வர் ஸ்டாலின் டுவிட் பதிவிட்டுள்ளார்.
 
இன்று குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு வரும்10 ஆம் தேதி இறுதி சடங்கு நடைபெறும் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாநில முதலமைச்சர்கள் இரங்கல்முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர் . அதேபோல் மாநில முதலமைச்சர்கள் பிபின் ராவத் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு வரும் 10  ஆம் தேதி இறுதி சடங்கு நடைபெறும் எனவும்,ராவத் வீட்டில்  காலை 11  மணி முதல்  2 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக உடல்கள் வைக்கப்படும் எனவும், டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது,தமிழ்நாடு முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில்,முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்ததுமே குன்னூருக்கு விரைந்து; இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மாநில அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்கிட உறுதியளித்துள்ளேன். 
 
நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு எனது வணக்கமும் அஞ்சலியும்! என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments