தீபாவளியை முந்திக் கொண்டு வரும் பருவமழை! - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

Prasanth K
வெள்ளி, 10 அக்டோபர் 2025 (08:14 IST)

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வரும் நிலையில் அதற்கு முன்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை முடிந்து சில மாதங்கள் கழித்து அக்டோபர் வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் நீர் பாசனம் வடகிழக்கு பருவமழையை அதிகளவில் நம்பியுள்ளது.

 

இந்த மாதம் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பண்டிகைக்கு ஆர்வமாக தயாராகி வருகின்றன. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது, உறவினர்கள் வீட்டிற்கு செல்வது, வெளியூர் செல்வது என மக்கள் பிஸியாக இருக்கும் சமயமாதலால் மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதே பலரது நினைப்பாக இருக்கும்.

 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீபாவளிக்கும் முன்பாக தொடங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, அக்டோபர் 16 முதல் 18ம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி அன்று பல மாவட்டங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தீபாவளி கொண்டாட்டத்தை பாதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments