தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Prasanth Karthick
சனி, 24 மே 2025 (12:07 IST)

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் கேரளா, தமிழக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கணிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இன்று தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இனி கேரளா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மும்பை உள்ளிட்ட அரபிக் கடலோர பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும்.

 

வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றாலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments