ஐபிஎல்லில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் திடீர் விலகல்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Prasanth Karthick
வியாழன், 22 பிப்ரவரி 2024 (15:43 IST)
ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் பிரபல இந்திய வீரர் போட்டியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளுக்கு இந்தியா முழுவதுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த ஆண்டும் சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே இறுதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான அணி அட்டவணை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தவரும், இந்தியாவின் ஸ்டார் பந்துவீச்சாளர்களில் ஒருவருமான முகமது ஷமி அணியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இடது கணுக்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளது.



இந்திய அணிக்காக கடந்த ஆண்டு உலக கோப்பை ஒருநாள் போட்டி முதலாக பல போட்டிகளில் விளையாடி வரும் ஷமி விக்கெட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். அவர் குஜராத் அணியில் இல்லாதது நிச்சயமாக அணியின் பலவீனமாக மாறும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

கோவை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு.. வெளியேற்றப்பட்ட தவெக தொண்டர்கள்..!

ஈரோட்டுக்கு வருபவர் பக்கத்தில் இருக்கும் கரூருக்கு வராதது ஏன்? விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்..!

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments