Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேச தடை?

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (13:01 IST)
சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்துக்கழகம் பரிந்துரை. 

 
தமிழக அரசின் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பலர் செல்போன்களில் சத்தமாக பேசுவதும், சத்தமாக பாடல்கள் வைத்து கேட்பதும் சக பயணிகளுக்கு பொதுவாகவே இடையூறு ஏற்படுத்தும்.
 
இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்துக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அனுப்பியுள்ளது. பேருந்துகளில் பாடல் கேட்பது, வீடியோ கேம் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக கேரள போக்குவரத்து கழகம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பேருந்துகளில் சத்தமாக பேசுவது, பாடல் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments