Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேன் கூட்டில் கல்லெறிய கூடாது – ஸ்டாலின் எச்சரிக்கை

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (18:23 IST)
தமிழ்நாட்டில் மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் “மும்மொழி கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் கொண்டு வந்தால் பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் “பதவியேற்ற உடனே தமிழகத்துக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது மும்மொழி கல்வி கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இருமொழி கொள்கை என்ற தேன் கூட்டிலே கல்லெறிய வேண்டாம். மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் வந்தால் பேரிடரை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இதை கண்டும் காணாமல் இருக்கும் எடப்பாடி அரசு உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் கட்சியின் பெயரில் உள்ள அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற பெயரையும் நீக்கிவிட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments