Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் பூர்வீக வீட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (07:41 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு இன்று முதல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். இன்று தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரில் இருந்து சற்றுமுன் பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
 
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது பூர்வீக வீட்டில் இருந்து தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.
 
இன்று மதியம் வரை திருவாரூர் சட்டமன்ற திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின் மாலை மற்றும் இரவில் தஞ்சை பாராளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஓட்டு சேகரிக்கவுள்ளர். நாளை அவர் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments