இளைஞர்கள் முதல்வனாக வரவேண்டும்! – “நான் முதல்வன்” திட்டம் தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:48 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று “நான் முதல்வன்” என்ற மாணவர்களுக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று தனது பிறந்தநாளில் காலையிலேயே மெரினா கடற்கரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் வைத்து மரியாதை செய்தார்.

பின்னர் ”நான் முதல்வன்” என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “எனது பிறந்தநாளில் எனது கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் கல்லூரி பட்டத்தை தாண்டிய தனித்திறமை கொண்டிருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும். இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியும், திறமையும் பெற்று அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments