Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுக்கு பின் தோனி வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்: முக ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (07:32 IST)
ஓய்வுக்கு பின் தோனி வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்
கிரிக்கெட் உலகின் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தோனி ஓய்வு முடிவு குறித்து கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் பலர் கருத்து கூறி வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ஃபேஸ்புக்கில் இதுகுறித்து கூறியதாவது:
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையைத் தரும் செய்தியாகும்.
 
நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர்! கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.
 
மேலும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை முக ஸ்டாலின் பகிர்ந்து உள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments