Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைமுக தேர்தலை நடத்தியது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (16:26 IST)
அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுகத் தேர்தல் நடந்தது என ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இதில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அவரச சட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்தது. 
 
இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்காக ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை செய்கிறார். 1996 வரை தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்தான் இருந்தது அதை நேரடி தேர்தலாக மாற்றியது திமுகதான்.
 
பிறகு 2006ல் மீண்டும் அதை மறைமுக தேர்தலாக மாற்றினார்கள். கேட்டால் கவுன்சிலர்கள் ஒரு கட்சியாகவும், மேயர் ஒரு கட்சியாகவும் இருந்தால் ஒன்றுபட்டு பணிபுரிய முடியாது என்றார்கள். ஸ்டாலின் அவர் இயற்றிய சட்டத்தை அவரே எதிர்ப்பது விந்தையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் கூறியதாவது, அதிமுகவினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நடத்தியது திமுக. அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுகத் தேர்தல் நடந்தது என விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments