Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் எம்.எல்.ஏக்கள்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (11:21 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளத்தை திமுக எம்.எல்.ஏக்கள் வழங்குவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனா நிவாரண நிதிக்கு பாமக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேலும் பல கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் மாத ஊதியத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments