Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரண்ட ரேக்ளா மாடு....சாலையில் கணவன் கண்முன்னே மனைவி பலி

Webdunia
திங்கள், 22 மே 2023 (23:05 IST)
கோவை மாவட்டம் வண்டிக்காரனூர் பிரிவு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டமுத்தூர் குப்பேபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ்(32). இவரது மனைவி புவனேஷ்வரி(25). இவர்கள் நேற்று மாலை வண்டிக்காரனூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்களுக்கு முன் சென்ற ரேக்ளா வண்டி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  மாடு திடீரென்று மிரண்டு எதிர்சாலைக்குத் திரும்பியதால், பின்னால் வந்த பிரகாஷின் வாகனம் மாட்டு வண்டியின் மீது மோதியது.

இதில், பிரகாஷும் அவரது மனைவியும்  தடுமாறி கீழே விழுந்தனர். புவனேஷ்வரிக்குத் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்து புவனேஷ்வரின்  உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments