Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிப் பாடங்கள் மீண்டும் குறைக்கப்படுகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (13:12 IST)
பள்ளி பாடத்திட்டங்களில் மீண்டும் சில பாடங்கள் குறைக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதலாக மீண்டும் பள்ளிகள் மெல்ல திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் குறுகிய காலத்தில் படிப்பதின் சிரமம் கருதி பாடத்திட்டங்களில் குறிப்பிட்ட பாடங்கள் சில குறைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் பாடத்திட்டம் மீண்டும் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் எனவும் பள்ளிகளில் ஏற்கனவே பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாடங்கள் குறைக்கப்படாது எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments