Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் கட்டணம் வசூலித்தால் லைசென்ஸ் ரத்து!? – ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (10:39 IST)
தீபாவளியை முன்னிட்டு செயல்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறாக தீபாவளிக்கு சில தினங்கள் முன்னதாக மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் அரசு பேருந்துகள் மட்டுமல்லாது தனியார் ஆம்னி பேருந்துகளிலும் மக்கள் அதிகம் பேர் முன்பதிவு செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிகமாக பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து எச்சரித்துள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் அவர்களது லைசென்ஸ் ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களை மக்கள் 1800 425 6151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments