Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வார்டிற்குள் சென்ற ஒரே அமைச்சர் நான்! – விஜயபாஸ்கர் பிரச்சாரம்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (10:27 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை தான் விசாரித்ததாக கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள், அவரின் 9 வயது மகள் அவருக்காக பிரச்சாரம் செய்தது போன்றவை அடிக்கடி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் “நான் பத்தாண்டு காலம் விராலிமலை தொகுதிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்துள்ளேன். இந்த பகுதி மக்களுக்கு நான் எந்த வித தீங்கையும் செய்யவில்லை. இலுப்பூர் தெரு வீதிகளில் செல்லும்போது ஓட்டுனரை ஹாரன் அடிக்காமல் மெதுவாகதான் போக சொல்லுவேன். கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளை கொரோனா வார்டிற்குள்ளேயே சென்று பார்த்து விசாரித்த ஒரே அமைச்சர் நான். என்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் இந்த தொகுதி மக்கள் நலன்களுக்காக பாடுபடுவேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments