Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இத்தன நாளா செய்தியாளர்கள சந்திக்கல? விஜயபாஸ்கர் மழுப்பல் பதில்!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:18 IST)
தமிழகத்தின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் ஏன் 15 நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.  தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஆரம்பத்தில் முனைப்பாக செயல்பட்டு தினசரி நிலவரத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து வந்தார் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்த நிலையில் கட்சி தலைமை அவரை ஓரம்கட்டி அவருக்குப் பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷை முன்னிறுத்துவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் விஜயபாஸ்கர். அவரிடம் இத்தனை நாட்களாக ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் ‘நான் நேற்று முன்தினம்கூட செய்தியாளர்களைச் சந்தித்தேன். அமைச்சர் என்ற முறையில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால்தான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லையே தவிர நீங்கள் எதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments