Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன்! – அமைச்சர் உதயநிதி உறுதி!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:31 IST)
டெங்கு, மலேரியா போல சனாதானத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.



தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் தொடர்ந்து தமிழக ஆளுனருக்கும், திமுகவிற்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. ஆளுனர் பல நிகழ்ச்சிகளிலும் சனாதானத்தை ஆதரித்து பேசி வருவதற்கு திமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அவ்வாறாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “டெங்கு, மலேரியா போல சனாதானத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட உரிமைகள் கண்காணிப்பகமும் தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்து பேசியுள்ள அமைச்சர் உதயநிதி “நான் ஒருபோதும் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைத்ததில்லை. சனாதன தர்மம் என்பது சாதி, பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. அதை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும், மனித சமத்துவத்தையும் நிலை நிறுத்துவதாகும். இதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன். காவி மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments