சைவம், அசைவம்... கூவத்தூர் ரகசியம் இதுதான்: உதயகுமார் பேட்டி!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (20:03 IST)
தமிழக அரசை விமர்சிப்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். தற்போது இவருடன் இணைந்துள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
 
மு.க.ஸ்டாலின், தினகரன், கருணாஸ், சமீபத்தில் விஜய் என யார் யார் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை விமர்சிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். 
 
கருணாஸ் சில வாரங்கலுக்கு முன்னர் கூவத்தூர் ரகசியத்தை வெளியே சொல்லிவிடுவேன் என பூச்சாடி காட்டினார். இதற்கு இவரது பதில் பின்வருமாறு, 
 
அதிமுக எம்எல்ஏ-க்கள் எல்லோரும் அந்த விடுதியில் தங்கியிருந்தோம், பேசினோம், சாப்பிட்டோம், தூங்கினோம். என்னை போன்றவர்கள் சைவம் சாப்பிட்டனர், கருணாஸ் போன்றவர்கள் அசைவம் சாப்பிட்டனர். இதுதான் கூவத்தூர் ரகசியம். இதைத்தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. 
 
ஆட்சியை குறைகூற கருணாஸுக்கு என்ன தகுதி உள்ளது? அவர் என்ன ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தின் பிரதிநிதியா? அம்மாவின் கருணையால் எம்எல்ஏ ஆனவர், அவ்வளவுதான் என பதிலளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments