Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடனே மதுவை ஸ்டாப் பண்ணா நரம்பு தளர்ச்சி வரும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (11:45 IST)
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் குறைந்தபட்சம் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து கொண்டே வரவேண்டும் என்று அரசியல் கட்சிகளும் சமூக நல ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதற்கு காரணம் குடிமகன்களின் உடல்நலன் கருதியே என்ற வித்தியாசமான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'மதுவை தொடர்ந்து குடித்து வருபவர்கள் திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்றும், குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.
 
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டங்களுடன் மீம்ஸ் போட்டும் கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments