Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 உலக அதிசயங்களை விட சிறப்பானது தஞ்சை பெரிய கோவில்: மத்திய அமைச்சர்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:27 IST)
உலகில் உள்ள ஏழு உலக அதிசயங்களை விட தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் அதிக சிறப்புகளை கொண்டது என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு சிறப்பு அனுமதி பெற்று வந்தார். அங்கு அவர் வராஹியம்மன், பெருவுடையார் அவர்களை தரிசனம் செய்து வழிபட்டார் 
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகளை அடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்றும் உலகில் உள்ள ஏழு அதிசயங்களை விட அதிக சிறப்பு வாய்ந்தது தஞ்சை பெரிய கோயில் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தஞ்சை பெரிய கோவிலுக்கு உரிய மரியாதை உலக அளவில் இன்னும் கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கூற்று அவர் பெரும் ஆறுதலை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments