Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 500 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (17:33 IST)
தற்போது 300 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 
 
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சில்லறை விலையில் தக்காளி விலை 200 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள 300 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது கூடுதலாக 200 ரேஷன் கடைகளில் அதாவது மொத்தம் 500 ரேஷன் கடைகளில் நாளை முதல் 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments