Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊரடங்கில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்! – அமைச்சர் எச்சரிக்கை!

ஊரடங்கில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்! – அமைச்சர் எச்சரிக்கை!
, திங்கள், 31 மே 2021 (15:09 IST)
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை காரணமாக கொண்டு 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணம் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து தெரிவித்த அவர் ”குழந்தை திருமணங்கள் நடத்துவது சட்டப்படி பெரும் குற்றம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், அதை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜினமோட்டோ உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காதது! – நிறுவனம் விளக்கம்!