Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்னல் கோளாறு.. சரிசெய்ய சென்ற ஊழியர்கள்.. மோதிய சரக்கு ரயில்! – ஆம்பூரில் சோகம்!

சிக்னல் கோளாறு.. சரிசெய்ய சென்ற ஊழியர்கள்.. மோதிய சரக்கு ரயில்! – ஆம்பூரில் சோகம்!
, திங்கள், 31 மே 2021 (09:01 IST)
ஆம்பூர் அருகே ரயில் சிக்னலை சரிசெய்ய சென்ற ஊழியர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள பெங்களூர் – சென்னை ரயில் மார்க்கத்தில் மழை பெய்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகாரை சேர்ந்த உதவியாளர் பர்வேஷ்குமார் ஆகியோர் சரிசெய்ய சென்றுள்ளனர்.

சிக்னலை சரி செய்து விட்டு தண்டவாளத்தில் கொட்டும் மழையில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு தடுப்பூசியை பெற்று தருவது பாஜகவின் கடமை: அமைச்சர் மா சுப்பிரமணியன்