Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் கருத்துதான் எங்கள் கருத்து: ஒன்னுக்குள்ள ஒன்னான அதிமுக - ரஜினி!!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (15:50 IST)
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்ல விஷயம். இந்த விஷயத்தில் ரஜினியின் கருத்துதான் அதிமுகவின் கருத்தும் என ஜெயகுமார் பேசியுள்ளார். 

 
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இந்திய நாட்டிற்கு என்பிஆர் அவசியம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அதேபோல சிஏஏவால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்னை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள். 
இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்ம பூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்?
 
அப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் அவர்களுக்காக முதல் ஆளாக நானே வந்து நிற்பேன். அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்திற்காக இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என தூண்டிவிடுகிறார்கள் என பேசினார். 
 
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்ல விஷயம். இந்த விஷயத்தில் ரஜினியின் கருத்துதான் அதிமுகவின் கருத்தும். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களுக்குப் பின்னால் நாங்கள் அனைவரும் சிறுபான்மையினர்களுக்கு ஆதரவாக செயல்படுவோம். 
 
மேலும், ஒரு சிறுபான்மையினருக்கு ஆபத்து என்றாலும் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் கூறியுள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்தின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments