கருப்பர் கூட்டத்திற்கு கருப்பு கொடி தூக்காதது ஏன்? திமுகவிற்கு ஜெயகுமார் கேள்வி!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (16:48 IST)
ஒரு மதத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் திமுக போராட்டம் நடத்தவில்லை என ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் கந்தகஷ்டி கவசத்தில் இடம்பெற்று ஒருசில வார்த்தைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது முருகன் பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  
 
அருவருப்பாகவும் ஆபாசமாகவும் அவர் செய்த விமர்சனம் இந்து மத ஆதரவாளர்களை குறிப்பாக முருக பக்தர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்த யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயகுமார், எந்த மதமாக இருந்தாலும் மதிக்க வேண்டும். அந்த வகையில், அனைத்திற்கும் போராட்டம் நடத்தும் திமுக, ஒரு மதத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’ஜனநாயகன்’ படத்தையும், சிபிஐயையும் வைத்து விஜய்யை மடக்க முடியுமா? பாஜக எண்ணம் ஈடேறுமா?

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.. கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!

’ஜனநாயகன்’ விஜய்யின் கடைசி படம் என்பதை நம்ப மாட்டேன்: தமிழிசை செளந்திரராஜன்

சென்னையில் 49வது புத்தக கண்காட்சி.. எப்போது, எங்கு தொடங்குகிறது?

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

அடுத்த கட்டுரையில்
Show comments