Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேபி அன்பழகனை அடுத்து இன்னொரு அமைச்சரும் கொரோனாவில் இருந்து குணம்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (16:36 IST)
இன்னொரு அமைச்சரும் கொரோனாவில் இருந்து குணம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருவதையும் பார்த்து வருகிறோம். இருப்பினும் தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது
 
அந்த வகையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்வி அமைச்சர் அன்பழகன் அவர்கள் குணமகி வீடு திரும்பிய நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்
 
அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு பூரண குணம் என்று  மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்ததை அடுத்தே அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களும் குணமாகி வருவதாகவும் விரைவில் அவரும் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் இன்னும் சில நாட்களில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments