அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் போடாதது ஏன்? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (11:05 IST)
அதிமுக செயற்குழு கூட்ட விவகாரத்தை தொடர்ந்து முதல்வர் கலந்து கொண்ட விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடைபெற்ற வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவிற்கான அழைப்பிதழில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறாததில் எந்த உள்நோக்கமும் இல்லை. கட்சி செயல்பாடுகள், மாநில அளவிலான நிகழ்வுகளில் இருவரது பெயருமே அழைப்பிதழில் இடம்பெறும். இது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நிகழ்ச்சி என்பதால் அவரது பெயர் இடம்பெறவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார்.. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!

காலை போலவே மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 அதிகரிப்பு!

2026 தமிழக தேர்தல்: தொகுதி மாறும் விஐபிக்கள் - தப்பிக்கும் யுக்தியா? வெற்றி வியூகமா?

2 கோடி கொடுத்து கார் நம்பர் வாங்கிய தொழிலதிபர்!... இந்தியாவிலேயே அதிகம்!...

கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லயே!. நடனமாடிய விஜயை திட்டிய ஜெயக்குமார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments