Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை என்று வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்: அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (10:28 IST)
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மழைநீர் சரியாக செல்லும் வகையில் கால்வாய்கள் தூர்வாராததால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பொதுமக்களும், எதிர்க்கட்சியினர்களும் சமூக ஆர்வலர்களும் புகார் கூறி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் மழை குறித்து ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'மழை என்று வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்' என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு அமைச்சரே இவ்வாறு பேசியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
குறிப்பாக இதுகுறித்து கண்டன அறிக்கை ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை இந்த மழை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் மழை வந்தால் தண்ணீர் தேங்கத்தான்  செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதல்ல' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments