செங்கல்பட்டு அருகே 2 மாடி பள்ளிக்கட்டிடம் இடிந்தது: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (10:10 IST)
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பழைய கட்டிடங்கள் இடியும் நிலையில் இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு பள்ளியின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது.



 
 
செங்கல்பட்டுக்கு அடுத்துள்ள ஒழலூர் என்ற பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக 2 மாடி பள்ளி கட்டடம் ஒன்றில் பள்ளி நடத்தி வரப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையில் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 
 
30 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் உறுதி குறித்து ஏற்கனவே பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினர்களிடம் எச்சரிக்கை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments