Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10.5% உள் ஒதுக்கீடு தீர்ப்பு: சட்டநிபுணர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

Advertiesment
10.5% உள் ஒதுக்கீடு தீர்ப்பு: சட்டநிபுணர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!
, வியாழன், 31 மார்ச் 2022 (12:52 IST)
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என சூப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில் இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
 
 10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்
 
வன்னியர் உள் ஒதுக்கீட்டு தரவுகள் சரியாக இல்லை என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடியபோதும் இத்தகைய தீர்ப்பு வந்துள்ளது
 
அதிமுக ஆட்சியில் தேர்தலுக்காக அவசர கோலத்தில் சரியான அடிப்படை தரவுகள் இன்றி இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால்தான் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்து கோவிலில் பரத நாட்டியம் ஆட பெண் கலைஞருக்கு அனுமதி மறுப்பு: என்ன காரணம்?