Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் பதவியை ராஜினாமா செய்தால் ரவியை எம்.எல்.ஏ ஆக்குகிறோம்: அமைச்சர் துரைமுருகன்..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (12:43 IST)
ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தால் அவரை எம்எல்ஏ ஆக்க தயார் என அமைச்சர் துரைமுருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக ஆளுநர் சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் அந்த கருத்துக்களுக்கு ஆளும் திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. தமிழக முதல்வரை நேரடியாக ஆளுநர் ரவியை தாக்கி பேசும் அளவுக்கு இரு தரப்புக்கும் சர்ச்சைகள் நீண்டு வருகிறது. 
 
இந்த நிலையில் ஆளுநர் பதவியே ராஜினாமா செய்துவிட்டு ரவி எம்எல்ஏவாக சட்டப்பேரவையில் வந்து விவாதம் செய்யட்டும் என்றும் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நாங்களே அவரை வெற்றி பெற வைத்து சட்டசபைக்கு அனுப்பி வைப்போம் என்றும் சட்டசபையில் வைத்து அவர் தாராளமாக தனது கருத்துக்களை விவாதம் செய்யலாம் என்றும் கூறினார். 
 
இல்லையென்றால் அவர் பாஜகவில் சேர்ந்தால் அவரை அமைச்சராக கூட ஆக்குவார்கள் என்றும் அவர் கூறினார், அமைச்சர் துரைமுருகனை இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments