Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவரை அடுத்து எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (19:19 IST)
திருவள்ளுவரை அடுத்து எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியா முழுவதும் காவி சாயம் பூச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாஜக மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் தமிழக பாஜகவினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பதிவு செய்த ஒரு புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில் வெளியிட்டு அதன் பின் பிரச்சனை காரணமாக அதனை டெலிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அருகே உள்ள கருங்காலி குப்பம் என்ற பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் எம்ஜிஆர் சிலைக்கு வெள்ளை பெயிண்ட் தான் அடித்து இருந்த நிலையில் தற்போது திடீரென காவிச்சாயம் பூசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது உள்ளூர் பாஜகவினர் வேலைதான் என அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments