Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (13:19 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று வெளியான தகவலின்படி நீலகிரி கன்னியாகுமரி கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து அறிவிப்பின்படி வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
 
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கோவை தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய திருப்பூர் திண்டுக்கல் தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் ஈரோடு சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments