Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சிகிட்டு ஓடும் நிர்வாகிகள்... காலியாகும் தேமுதிக கூடாரம்!!

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (11:46 IST)
தேமுதிக கட்சியின் கன்னியாகுமரி நிர்வாகிகள் சிலர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் தேமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வியை சந்தித்தது. 2% வாக்குகளை மட்டுமே மக்களவை தேர்தலில் பெற்று, மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. 
இந்நிலையில், தேமுதிக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தேமுக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். ஆம், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவரது தலைமையில் திமுகவில் இணைந்தனர். அப்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் உடன் இருந்தார். 
டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைகள் விலகுவதை போலவே தற்போது தேமுதிகவிலும் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் என்னும் ஆளுமை கட்சி பணிகளில் இருந்து விலகி இருப்பதாலும், பிரேமலதா கட்சி நடத்தும் விதம் அதிருப்தியை ஏற்படுத்துவதாலும், தேமுதிக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments