Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்காக 6 மணி நேரம் கடலில் மிதந்து பிரச்சாரம் செய்த மதிமுக தொண்டர்கள்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:15 IST)
திமுகவுக்காக 6 மணி நேரம் கடலில் மிதந்து பிரச்சாரம் செய்த மதிமுக தொண்டர்கள்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 6 தொகுதிகள் கிடைத்துள்ளது இந்த ஆறு தொகுதிகளில் மட்டுமின்றி திமுக போட்டியிடும் தொகுதிகளிலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ராமேஸ்வரம் தொகுதிகளில் திமுகவுக்காக மதிமுக தொண்டர்கள் வித்தியாசமாக கடலில் மிதந்தபடி வாக்கு சேகரித்தனர். திமுக கொடி மற்றும் பதாகையுடன் ராமேஸ்வரம் கடல் பகுதியில் சுமார் 6 மணி நேரம் மிதந்தபடியே மதிமுக தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
மதிமுக தனித்து போட்டியிட்ட போதும் மக்கள் நல கூட்டணியுடன் போட்டியிட்ட போதும் கூட அந்த கட்சியின் தொண்டர்கள் இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்யவில்லை என்பதும் தற்போது திமுக கூட்டணிக்காக வேற லெவல் பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments