Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயிலாடுதுறையை அதிர வைத்த ஹெல்மெட் கொள்ளையன்! – கைது செய்தது போலீஸ்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (09:13 IST)
மயிலாடுதுறையில் பூட்டிய கடைகளை கொள்ளையடித்து வந்த ஹெல்மெட் கொள்ளையனை பொதுமக்கள் வளைத்து பிடித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் பல பகுதிகளில் இரவு நேரங்களில் கடைகள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுமார் 120 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஹெல்மெட் அணிந்து திருடும் ஒரே நபர்தான் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டியதை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மயிலாடுதுறையில் கடை ஒன்றை ஹெல்மெட் திருடன் கொள்ளையடிக்க முயன்ற்போது பொதுமக்கள் வளைத்து பிடித்துள்ளனர். அவனை போலீஸார் கைது செய்து விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்றும், ஏற்கனவே அவர் மீது பொள்ளாச்சி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 35க்கும் அதிகமான வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments