Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திகவை தொடர்ந்து ஆதரவு கொடுத்த திருமுருகன் காந்தி! – வலுப்பெறும் மனு தர்மத்திற்கு எதிரான போராட்டம்

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (17:14 IST)
மனு தர்ம சாஸ்திரத்தை தடை செய்ய வேண்டுமென விசிக போராட்டம் நடத்த உள்ள நிலையில் அதற்கு மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நாளை பெண்களை இழிவாக பேசும் மனுதர்ம சாஸ்திரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு முன்னதாக தி.க தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தற்போது மே17 இயக்கமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமுருகன் காந்தி “மனுதர்மத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வாழ்த்துகள் தோழர் திருமாவளவன். பெண்கள்,உழைக்கும் மக்கள் என அனைவரையும் இழிவு செய்யும் மனுதர்மத்தை நாகரிகமடைந்த எவராலும் ஏற்கமுடியாதது. வாய்ப்புள்ள அனைவரும் பங்கேற்போம், ஆதரிப்போம்,போராட்டத்தை விரிவுபடுத்துவோம். மனுதர்ம இழிவை துடைத்தெறிவோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments