Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகி பண்டிகையில் பிளாஸ்டிக் எரிக்க தடை! – கண்காணிப்பில் காவல்துறை!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (11:28 IST)
போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையின் உதவியுடன் 15 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாளான போகி பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பார்கள். தற்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில் பலர் போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் சுற்றுசூழல் மாசடைவதுடன், அதை சுவாசிக்கும் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி போகி அன்று பிளாஸ்டிக் வீட்டு உபயோக பொருட்கள், டயர் போன்ற பொருட்களை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி மேற்சொன்ன பொருட்களை எரித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments