Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும்! – தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:42 IST)
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்து கோவில்களை அறநிலையத்துறையிடம் இருந்து கைப்பற்றி மீண்டும் பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தெய்வத் தமிழ் பேரவை பத்திரிக்கை சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பே.மணியரசன் ”ஜக்கி வாசுதேவின் அறநிலையத்துறையை கலைக்கும் முயற்சி ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் நோக்கங்களை ஒத்ததாக உள்ளது. மேலும் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையம் சட்டத்திற்கு புறம்பாக மலைப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்களது வழிபாட்டு முறை தமிழ் சிவநெறி-திருமால் நெறிக்கு புறம்பாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. எனவே அவரது ஈஷா மையத்தை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments